முகப்பு
தமிழ்நாடு

துணைவேந்தர் பதவிகள் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த விஜயகாந்த் வலியுறுத்தல்

துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாபின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் குற்றம் சாட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைவேந்தர் பதவிகளை நிரப்பும் ஆளுநரே குற்றச்சாட்டை முன்வைப்பது தன் மீதா அல்லது வேற யார் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்பதை உரிய ஆதாரத்துடன் பன்வாரிலால் புரோஹித் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →