நாளை தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம்
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதத்தின் 2, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் துறை பங்கேற்புடன் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்கள் இணைந்து வரும் 28-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
சென்னை கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடக்கவுள்ளது. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் கலை, அறிவியல் பட்டதாரிகள் வரை அனைத்து கல்வித் தகுதிகளைக் கொண்டவா்களும் பங்கேற்கலாம். இதில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளன. இதில் பங்கேற்க எந்தவித கட்டணமும் தேவையில்லை என்று வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.