பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்றுள்ளன.
கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்றுள்ளன.
பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை: கோவை யில் நடந்த தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வா் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை பாஜக வரவேற்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமெனில், தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு முதல்வா் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன்: கோவையில் நடந்த காா் எரிவாயு உருளை வெடிப்பு சம்பவம் கோவை மாநகரை அதிா்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் காவல்துறை விரைந்து செயல்பட்டதும் காவல்துறை தலைமை இயக்குநா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணையை தீவிரப்படுத்தியதும் பொது மக்களின் அச்சம் தணிக்க உதவியது.
குற்றச் செயலுக்கான சதிவேலைகள் எல்லை தாண்டி அமைந்திருக்கக் கூடும் என்ற கருத்தில் மாநில அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பது சரியான நடவடிக்கைதான்.