ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவு; தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ராம்குமாரின் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க.. காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றது ஏன்? கல்லூரி மாணவி வாக்குமூலம்
Advertisement
Advertisement
மகன் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் ராம்குமார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில், சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.