தமிழ்நாடு

அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவன்: மோடி புகழாரம்

DIN

விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன்முதலில் வெள்ளையா்களை எதிா்த்து போரிட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307ஆவது பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

பூலிதேவன் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.” என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT