தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மின் உற்பத்தியும் குறைந்தது!

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான தேக்கடி மற்றும் பெரியாறு அணைப்பகுதியில் மழை பெய்ததால், ஒரே நாளில் நீா் வரத்து அதிகரித்த நிலையில், தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு வியாழக்கிழமை குறைக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணைக்குள் புதன்கிழமை வினாடிக்கு, 2,272 கன அடி தண்ணீர் வந்தது, தமிழக பகுதிக்கு தண்ணீர் வினாடிக்கு, 1,822 கன அடியாக திறக்கப்பட்டது.

அதே நேரத்தில் வியாழக்கிழமை அணைக்குள் விநாடிக்கு, 2,958 கன அடி தண்ணீர் வந்த நிலையில், தமிழக பகுதிக்கு வினாடிக்கு, 933 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. 

இதனால் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகளில் புதன்கிழமை 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், வியாழக்கிழமை 2 மின்னாக்கிகள் மூலம், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 17.20 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 19.20 மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT