கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.