தமிழ்நாடு

மாணவர்களுக்கு அக். 1-ல் தமிழ் ‘திறனறித் தேர்வு’: வெற்றி பெற்றால் மாதம் ரூ. 1,500!

DIN

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

“பள்ளி மாணவ / மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத 09.09.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம்
இதற்கான பாடத்திட்டம் ஆகும்.

இத்தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 01.10.2022 அன்று காலை 10.00 – 12.00 வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நிகழ்வாண்டிற்கு 2.70 கோடியும், வரும் ஆண்டுமுதல் ரூ. 5.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா் பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

வணிகா் சங்க முப்பெரும் விழா

பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு மே 28 வரை விண்ணப்பிக்கலாம்

மன்னாா்குடியில் வெப்பத்தின் தாக்கும் குறைவு

புவனகிரி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT