இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது 
தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

DIN

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து நடை பயணத்தை புதன்கிழமை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டு இருந்தார். 

கோவையிலிருந்து ரயில் மூலமாக புறப்பட்ட அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.

அவரை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரது உதவியாளர்கள்  அரிகரன்,  பொன்னுசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT