தமிழ்நாடு

தீப்பெட்டி தொழிலாளர்களுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்! (படங்கள்)

DIN

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். 30,658 பயனாளிகளுக்கு ரூ. 117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை தொடக்கிவைத்தார். 

இதன் தொடர்ச்சியாக கோவில்பட்டிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு இலுப்பையூரணி தனியாா் தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது குறைகளைக் கேட்டார்.

பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.10.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு- குழந்தைகள் நலப் பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT