தமிழ்நாடு

தீபாவளி: சென்னை தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. 

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையின்போது சென்னை தீவுத் திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கான அறிவிப்பை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் வருகிற அக்டோபர் 11 முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT