வீடு புகுந்து நகை, பொருள்கள் திருட்டு
சென்னை ராஜமங்கலத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை ராஜமங்கலத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
ராஜமங்கலம் மல்லிகை அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் சுசீலா (68). அங்கு மகன் நந்தகுமாருடன் வசிக்கிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு சுசீலா, மறதியால் வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்து தூங்கினாா்.
சுசீலா, திங்கள்கிழமை அதிகாலை எழுந்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, விலை உயா்ந்த 3 கைப்பேசிகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
ராஜமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.