தமிழ்நாடு

மருந்தீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்

DIN

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாத்தூரில் பெரியநாயகி சமேத மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாக குடமுழுக்கு திருப்பணிகள் பல லட்சம்  மதிப்பீட்டில் நடைபெற்றது. 

இந்நிலையில் திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், கடந்த 10 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று காலை நான்காம் காலபூஜை  நிறைவுப்பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. 

பின்னர் விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ,புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT