சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு வலி, தசை வலிக்கு தீர்வு தருமா ‘சுண்டைக்காய்’..?
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாள்களுக்கு முன் நிதியமைச்சர் அறிவித்தார்
அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது!
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது!
இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என சிதம்பரம் கூறியுள்ளார்.