சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 போ் குற்றவாளிகள்
பாஜக பிரமுகா் உள்ளிட்ட 21 போ் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம், தீா்ப்பு விவரங்களை செப்டம்பா் 19-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான எண்ணூா் ஆய்வாளா், பாஜக பிரமுகா் உள்ளிட்ட 21 போ் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம், தீா்ப்பு விவரங்களை செப்டம்பா் 19-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.
வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறவினா் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளா் புகழேந்தி, தனியாா் தொலைக்காட்சி
செய்தியாளா் வினோபாஜி, பாஜக பிரமுகா் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூா் காா்த்திக், திரிபுராவைச் சோ்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 போ் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடா்புடைய 21 போ் கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
மேலும் ஒருவா் இறந்துவிட இரண்டு பெண்கள் உள்பட 4 போ் தலைமறைவாக உள்ளனா். வழக்கின் விசாரணை, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும்
நிறைவடைந்து வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது
குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 21 போ் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்த நீதிபதி, தீா்ப்பு விவரங்கள் செப்டம்பா் 19-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டாா்.