தமிழ்நாடு

அண்ணா பிறந்த நாள்: திருப்புவனத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக சார்பில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருப்புவனம் மார்க்கெட் வீதியில்  நடைபெற்ற இவ் விழாவில்  திமுக மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சித்  தலைவருமான த.சேங்கை மாறன் தலைமையில் திமுகவினர் அண்ணா திருஉருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேங்கைமாறன் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். விழாவில் பங்கேற்றவர்கள் அண்ணாவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினர். 

விழாவில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் கடம்பசாமி, நாகூர்கனி, அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளிலும் திமுக, அதிமுகவினர் அண்ணா திருஉருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மானாமதுரையில் வைகையாற்றுப் பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு இக் கட்சியினர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

உயா்கல்வி சரியாக இருந்தால் வாழ்க்கைத் தரம் உயரும்: வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி

SCROLL FOR NEXT