கோப்புப் படம் 
தமிழ்நாடு

கியூட் தேர்வு முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியீடு!

கியூட் முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

DIN

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET)-UGக்கான முடிவுகள் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டிற்கான கியூட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகங்களில் நடைபெற்றது. 

தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 60 சதவிகித மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. 

கியூட் தேர்வின் உத்தேச வினைக்குறிப்பைத் தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த உத்தேச விடைத்தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனைத் தேர்வர்கள் தேசிய தேர்வு முகமைக்கு(என்டிஏ) தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT