முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் முகக் கவசம் கட்டாயம்: மாநகராட்சி

சென்னையில் கடந்த 2 நாட்களாக கரோனா அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 15 செப்டம்பர், 2022 at 7:48 PM
பகிர்:

சென்னையில் கடந்த 2 நாட்களாக கரோனா அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருவதால் பொது இடங்களில் கரோனா விதிமுறைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

சளி, இருமல், காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களை அணுக வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.