மணப்பாறை அடுத்த எளமணம் பகுதி அரசு மதுபானக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் மர்மப் பொருள் ஒன்று இருந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் எளமணம் பகுதி அரசு மதுபானக் கடையில் ரூ.210 கொடுத்து ரசீது பெற்று வாங்கிய மது பாட்டிலில் மர்மமான பொருள் ஒன்று இருந்துள்ளது. வாங்கியவர் இதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.