தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்பு

DIN

சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா வியாழக்கிழமை (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வந்த முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமையுடன்(செப்.12) ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை(செப்.12) பொறுப்பேற்றுக் கொண்டாா். செப்டம்பா் 21-ஆம் தேதியுடன் நீதிபதி எம்.துரைசாமி ஓய்வுபெற்றார். 

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா வியாழக்கிழமை (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவர் அடுத்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி பணி ஓய்வு பெற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் 21 நீதிபதிகளின் பணியிடம் காலியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT