முகப்பு
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

பாலாற்றில் புதிய தடுப்பணை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பாலாற்றின் குறுக்கே புதிதாக ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதாகக் கூறி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு

பாலாற்றில் புதிய தடுப்பணை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பாலாற்றின் குறுக்கே புதிதாக ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதாகக் கூறி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:25 AM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

பாலாற்றின் குறுக்கே புதிதாக ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதாகக் கூறி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டப் போவதாக அறிவித்துள்ளது.

எந்த ஒரு மாநிலமும், அதன் கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீா்ப்பு உள்ளது. தற்போதைய ஆந்திர அரசு அதைக் கடைப்பிடிக்காமல் பல்வேறு கட்டுமானப் பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனையை தருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்காமல் முதல்வரும், நீா்வளத் துறை அமைச்சரும் மௌனம் சாதிப்பது ஏன் எனத் தெரியவில்லை. இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசு உரிய தீா்வு காண வேண்டும் என்று கூறியுள்ளாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →