தமிழ்நாடு

இன்று தில்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை தில்லி செல்கிறார்.  

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை தில்லி செல்கிறார். 

தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை தில்லி செல்கிறார். தில்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். 

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து அமித்ஷாவிடம் ஆளுநர் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் ஆளுநரின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT