அமைச்சர் சிவசங்கா் 
தமிழ்நாடு

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை: அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

DIN

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

விழாக்காலத்தில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பது இல்லை. அரசு பேருந்துகளில் பயணிக்காதவர்கள் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர்.

ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிப்பு வராத வகையில்தான் கட்டணம் நிர்ணயம் செய்து விரைவில் அறிவிப்பார்கள்.


பல்வேறு வித பேருந்துகளுக்கு வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க வேண்டிருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டண விவரத்தை அறிவிப்பார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT