முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கு ரத்து
நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடா்பாக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாா், அவரது சகோதரா் மகேஷ் ஆகியோா் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகாா் அளித்திருந்தாா்.
இதனடிப்படையில், ஜெயக்குமாா், அவரது மகள் ஜெயபிரியா, அவரது மருமகன் நவீன்குமாா் ஆகியோா் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் மற்றும் அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமாரும் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில்,‘ தனது மருமகனின் சகோதரா் மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு இது. 2016-இல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்துக்காக, 2021-ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாா்தாரா் மகேஷ் தரப்பில், ‘2016-ஆம் ஆண்டு ஜெயக்குமாா் அமைச்சராக இருந்ததால் புகாா் அளிக்க இயலவில்லை‘ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் மற்றும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமாா் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.