தமிழ்நாடு

பூஜையில் தீ விபத்து: மூதாட்டி பலி

DIN

சென்னை வேளச்சேரியில் அமாவாசை பூஜையின்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

வேளச்சேரி, பேபி நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (70). இவா் மனைவி கமலா (68). இந்தத் தம்பதி கடந்த 25-ஆம் தேதி மகாளய அமாவாசையொட்டி, வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்தனா்.

அப்போது, பூஜையின்போது கற்பூரத்தில் இருந்த தீ, கமலாவின் சேலையில் பிடித்தது. சேலை முழுவதும் தீ பரவியதால், கமலாவின் அலறல் சப்தம் கேட்டு பத்மநாபன், அவரைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால் அவரும் தீயில் சிக்கினாா்.

இருவரது சப்தம் கேட்டு, பக்கத்து வீட்டினா் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். பலத்தக் காயமடைந்த இருவரையும் மீட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கமலா, வெள்ளிக்கிழமை இறந்தாா். பத்மநாபன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT