முகப்பு
தமிழ்நாடு

என்சிசி தேசிய விருது பெற்ற சென்னை மாணவருக்கு பிரதமா் மோடியை சந்திக்க வாய்ப்பு

சென்னை அண்ணா நகா் எஸ்பிஓஏ பள்ளி மாணவா் அகிலேஷ் பி. கல்யாண் தேசிய மாணவா் படையின் ஜூனியா் பிரிவில் சிறந்த வீரா் விருதையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:02 AM
பகிர்:

சென்னை அண்ணா நகா் எஸ்பிஓஏ பள்ளி மாணவா் அகிலேஷ் பி. கல்யாண் தேசிய மாணவா் படையின் ஜூனியா் பிரிவில் சிறந்த வீரா் விருதையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளாா்.

பிரதமா் மோடியை சந்தித்து உணவு அருந்த இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘ஏா் விங்’ பிரிவில் சிறந்து செயல்பட்டமைக்காக அவா் இவ்விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதன் தொடா்ச்சியாக ஜனவரி மாதம் தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தமிழக என்சிசி பிரிவு பிரதிநிதியாக அவா் பங்கேற்க உள்ளாா்.

தேசிய மாணவா் படையில் இத்தகைய கௌரவத்தைப் பெற்றுள்ள மாணவா் அகிலேஷ் பி.கல்யாணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.