முகப்பு
உலகம்

ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்! சீனா எதிர்ப்பு

மத்திய கிழக்கில் போரில் உறுப்பு நாடுகளை ஈடுபடுத்துவதற்கு சீனா கடும் எதிர்ப்பு

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:01 AM
- சித்திரிப்பு
பகிர்:

மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளை ஈடுபடுத்தப்படுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தினர். பதிலடியாக ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலுக்கு மற்றைய நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவின் பிரதிநிதி ஃபு காங் பேசுகையில், "மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளை அனுமதிப்பது என்பது சட்டவிரோதமான மற்றும் கண்மூடித்தனமான படைகளின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாக்குவதற்குச் சமம்.

ராணுவ நடவடிக்கைகளின் அடிப்படையில் எந்தவொரு பிரச்னையையும் தீர்க்க முடியாது. மேலும், மோதலைத் தீவிரப்படுத்துவது எந்தத் தரப்பினரின் நலனுக்கும் பாதிப்பைத்தான் விளைவிக்கும்" என்று தெரிவித்தார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்துகளுக்கு மத்தியில், சீனா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

China opposes use of force in Middle East, warns it would legitimise unlawful action: UN envoy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.