முகப்பு
உலகம்

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல் நடத்தியது பற்றி..

Updated On : 1 ஏப்ரல், 2026 at 4:38 AM
இஸ்ரேல் - ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - AP
பகிர்:

டெஹ்ரான்: அமெரிக்க நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் கடற்படை, அமெரிக்க, இஸ்ரேலிய இலக்குகள் மீது கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடற்படையின் 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4'-இன் 88-வது தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலையில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக நான்கு தாக்குதல்களை நடத்தியதாக பிரஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

எதிரிகளின் இலக்குகளை குறி வைத்து, தங்கள் நாட்டு கடற்படை கடுமையான தாக்குதலை நடத்தியிருப்பதாக ஈரான் தெரிவித்திருப்பதாக பிரஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

வளைகுடாவின் நடுக்கடலில், 'எக்ஸ்பிரஸ் ஹல்ஃபாங்' என்ற இஸ்ரேலின் கொள்கலன் கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தாக்குதல் நடவடிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையோரத்தில் உள்ள அமெரிக்க கடற்படையினரின் மறைவிடம் ஒன்று, வெடிகுண்டு வீசும் ட்ரோன்கள் மூலம் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.