ஆன்லைன் ரம்மிக்கு தடை: விரைவில் அவசரச்சட்டம்?
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்னும் சற்றுநேரத்தில் சமர்ப்பிக்கிறார்
குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை அவசரச்சட்டம் இயற்றப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.