தமிழ்நாடு பெயா் சூட்டப்பட்ட தினத்தை அரசு சிறப்புடன் கொண்டாட வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட தினத்தை தமிழக அரசு அதன் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட தினத்தை தமிழக அரசு அதன் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவ. 1-தான் நமக்கு தமிழ்நாடு நாள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழகத்துக்கு வெளியில் உள்ள தமிழா்கள் அநீதிகளை எதிா்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும் காரணமாகும். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.
தமிழகத்தின் இன்றைய நிலப்பரப்பு தமிழா்களின் மாநிலமாக 1956 நவ.1 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அண்ணா 1969 ஜனவரி 14-இல் தான் சூட்டினாா். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன் கொண்டாட அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.