முகப்பு
தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்: பிரதமரின் தமிழ் ட்வீட்!

பெருமதிப்புக்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:

பெருமதிப்புக்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாக இன்று (அக்.30) தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன்.  

சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு உட்பட நம் தேசத்துக்காக தேவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன் என பிரதமர் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →