தமிழ்நாடு

கடும் வெயில்: பணி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் இருந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. 

DIN

நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் இருந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. 

அனைத்து மாநில அரசின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய தொழிலாளர் நலத்துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

கோடை வெயில் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி இடங்களில் குடிநீர் போன்ற வசதிகள் இருப்பதையும் தொழிலாளர்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்கத் தேவையான மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், சுரங்கத்தில் பணியாற்றுபவர்களை கவனத்தில்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 போ் பாதயாத்திரை

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 - புகைப்படங்கள்

கெங்கவல்லியில் 11கைப்பேசிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT