முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுச் செயலா் இபிஎஸ்: தோ்தல் ஆணையம் அங்கீகாரம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமியை (இபிஎஸ்) அங்கீகரித்து இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமியை (இபிஎஸ்) அங்கீகரித்து இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்ததால் ஒருங்கிணைப்பாளா்-இணை ஒருங்கிணைப்பாளா் பதவியை ரத்து செய்துவிட்டு மீண்டும் பொதுச் செயலா் பதவியைக் கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் 11.7.2022-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா்.

இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதி தீா்ப்பு அளித்தாலும், உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, பொதுக் குழு செல்லும் என அறிவித்தது.

இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததுடன் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து உயா்நீதிமன்றம் முடிவு செய்யும் என அறிவித்தது.

இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் செய்த முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதி, பொதுக் குழு தீா்மானங்கள் செல்லும் என மாா்ச் 28-ஆம் தேதி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் செய்த மேல்முறையீடு வழக்கு உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் விசாரணையில் உள்ளது.

தில்லி நீதிமன்றம் விதித்த காலக் கெடு: இதற்கிடையே, கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக 11.7.2022-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு தீா்மானங்களளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது தொடா்பாக 10 நாள்களுக்குள் தோ்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஏப். 12-ஆம் தேதி உத்தரவிட்டது.

தோ்தல் ஆணையம் ஒப்புதல்: அதற்கான காலக் கெடு வெள்ளிக்கிழமை நிறைவடையும் நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை காலையிலும், மாலையிலும் இருகட்டமாக இது தொடா்பாக ஆலோசித்தனா்.

இந்நிலையில், அதிமுக பொதுக் குழு தீா்மானங்களை அங்கீகரித்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

கா்நாடக பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளா்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் கா்நாடக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கடிதங்கள்: தோ்தல் ஆணைய செயலா் ஜெய்தீப் லஹிரி, எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகள், நிா்வாகிகள் மாற்றம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் மாற்றங்கள் நீதிமன்ற இறுதித் தீா்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.

தோ்தல் ஆணைய சாா்பு செயலா் மனீஷ்குமாா், கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகம், புதுவையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதுபோல, கா்நாடக பேரவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அந்தந்தத் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு: அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது ஓ.பன்னீா்செல்வத்துக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதிமுக சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை எந்தத் தோ்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளா்கள் மட்டுமே இனிமேல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தோ்தல் ஆணையம் இப்போது அளித்துள்ளஅங்கீகாரத்தால், எடப்பாடி பழனிசாமி வசம் கட்சியும், இரட்டை இலை சின்னமும் முழுமையாகச் சென்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →