நிதி நிறுவனங்களில் முதலீடு: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - முதல்வர்
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது மொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது மொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், ஆருத்ரா போன்ற நிதி நிறுவனங்கள் மக்களிடம் ஆசையைத் தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றன. இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது மொதுமக்கள் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.