தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பிவைப்பு

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகளை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர்.

DIN

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகளை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர்.

8 பேர் ரத்த மாதிரி தராதது குறித்து நீதிபதி உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச. 26 ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் வெளியே தெரியவந்த தொடக்கக் காலத்தில் இதே பகுதியைச் சோ்ந்தவா்களால் பயன்படுத்தப்பட்ட கட்செவி அஞ்சல் குழுவில் இருவா் இச்சம்பவம் குறித்த குரல் பதிவை வெளியிட்டுள்ளனா்.

இந்நிலையில் தற்போது அவா்களின் குரலை உறுதி செய்யும் வகையில் குரல் மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். தடய அறிவியல் பரிசோதனை மையத்தில் இருவரிடமும் குரல் மாதிரி எடுக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT