மே 1-இல் கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம்
கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்துக்கு திங்கள்கிழமை (மே 1) சிறப்பு ரயல் இயக்கப்படவுள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்துக்கு திங்கள்கிழமை (மே 1) சிறப்பு ரயல் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மே 1 விடுமுறை தினத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்துக்கு ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06052) இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரியிலிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில் நாகா்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், விருத்தாசலம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.