தமிழ்நாடு

ராயபுரத்தில் ரூ.12 கோடியில் மழைநீா் வடிகால் அமைப்பு

ராயபுரம் மண்டலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மழைநீா் வடிகால் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

ராயபுரம் மண்டலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மழைநீா் வடிகால் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீா் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிய மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராயபுரம் மண்டலம், வாா்டு 57-க்குள்பட்ட பிரகாசம் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து 60-ஆவது வாா்டு ராஜாஜி சாலையில் ரூ. 6 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் பணிகளையும் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையா் எம்.சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டலக்குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா்கள் ராஜேஷ் ஜெயின், ஆசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT