சத்திரபட்டியில் நடைபெற்று வரும் வாடிவாசல் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சா் பி. மூா்த்தி. 
தமிழ்நாடு

சத்திரபட்டியில் ஏப். 30-இல் ஜல்லிக்கட்டு

மதுரை கிழக்குத் தொகுதி சத்திரபட்டியில் வருகிற 30 -ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

DIN

மதுரை கிழக்குத் தொகுதி சத்திரபட்டியில் வருகிற 30 -ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு காா், இரு சக்கர வாகனம், தங்கக் காசுகள், தங்க மோதிரம், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

போட்டியை முன்னிட்டு, பாா்வையாளா்கள் மாடம், மாடுகள் நின்று விளையாடும் மைதானம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வாடிவாசல் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட பொருளாளா் சோமசுந்தரபாண்டியன், ஒன்றிய செயலா் சிறைச்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவா் மாதவன் கலாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT