தமிழ்நாடு

திரைப்பட பாடலை கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய மாணவிகள்!

DIN

திருப்பத்தூர் அருகே விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கரோனா விழிப்புணர்வு பாடலாகப் பாடி  ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் அசத்தியுவுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மானவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் இந்த பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தனித்திறமை பெற்று விளங்கி வருகின்றனர். இதற்கு முழு காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா ஆசிரியர் ஆவார்.

இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் வேதிகா மற்றும் ஷிவானி இருவரும் விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கரோனாவே ஓடிவிடு என பாடி அசத்தினர். 

மேலும் சுத்தமாக கை கழுவ வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT