முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
கோப்புப்படம்
பகிர்:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை காலை 8 மணிக்கு அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்த பேரணியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.