தமிழ்நாடு

சுருளி அருவியில் 3வது நாளாக முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் 3 ஆவது நாளாக யானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

DIN


கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் 3 ஆவது நாளாக யானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

தேனி மாவட்டம் சுருளி அருவி ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. கடந்த புதன்கிழமை 2 குட்டிகளுடன் 8 யானைகள் அருவியின் அடிவாரப்பகுதியில் கருப்பசாமி கோயில் அருகே முகாமிட்டது. யானைக் கூட்டத்தை கண்காணித்த புலிகள் காப்பகத்தினர் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அதே யானைக்கூட்டம், அந்த பகுதியிலேயே தொடர்ந்து 3ஆவது நாளாக முகாமிட்டுள்ளது தெரியவந்தது. யானைகூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்து றையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க தடையை நீட்டித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT