கைது செய்யப்பட்ட மீனவர்கள் 
தமிழ்நாடு

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

DIN

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் 9 பேரை கைது செய்தனர்.

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று காலை 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 9 மீனவர்களையும் தமிழகம் அனுப்புவதற்கான பணிகளை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் தனுஷுடன் இணைந்த சாய் பல்லவி!

விஜய் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! - நயினார் நாகேந்திரன் பதில்

டி20 உலகக் கோப்பை 2026: 20 அணிகளின் வீரர்கள் விவரம்!

சிறுசேரி சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா: முதல்வர் திறப்பு!

என் தனிமை நீங்கியது : முதல் கார் வாங்கிய சின்ன திரை நடிகை!

SCROLL FOR NEXT