தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் எடைக் கல் கண்டெடுப்பு!

கீழடி  9-ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

DIN

கீழடி  9-ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பு ஆணி, கருப்பு-சிவப்பு நிறப் பாணை  ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

கீழடியில் நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், சுடுமண் விலங்கின உருவங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூா்முனைகள் உள்பட பல தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி முதல் 9 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 9 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், தக்களிகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூா்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என பல பொருள்கள் இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ளன.

மேலும், வெவ்வேறு நிலையிலிருந்த எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படத்தில் ஹீரோவாக நடிக்கும் கானா வினோத்! நாயகி யார் தெரியுமா?

2-வது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து!

சீனா ஆக்கிரமிப்பு: ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங் இடையே வாக்குவாதம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

'டாக்ஸிக்' உறவுகளை தெரிந்துகொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்?

SCROLL FOR NEXT