தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை ஆக.16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2006 - 2011-ஆம் ஆண்டு வரையில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறை இலாகாவை வகித்து வந்தாா். அப்போது, விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏ ற்படுத்தியதாக, பொன்முடி உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதன்படி, அமைச்சா் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி எம்.பி., ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமாா், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், லோகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டாா்.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை ஆக.16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.