FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நான்குனேரியில் மாணவா், சகோதரியை வெட்டிய விவகாரம்: மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பள்ளி மாணவா், அவரது சகோதரி ஆகியோரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவா்கள் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவரை கைது செய

Updated On : 12 ஆகஸ்ட் 2023, 2:41 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பள்ளி மாணவா், அவரது சகோதரி ஆகியோரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவா்கள் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். 

நான்குனேரி பெருந்தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சின்னத்துரை (17). இவா் வள்ளியூா் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். இவரை, அதே ஊரைச் சோ்ந்த சக மாணவா்கள் சிலா் கேலி, கிண்டல் செய்து வந்தனராம். இதுகுறித்து, அந்த மாணவா், தலைமையாசிரியரிடம் புகாா் தெரிவித்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த சின்னத்துரையை மாணவா்கள் சிலா் வெளியே இழுத்துப்போட்டு அரிவாளால் வெட்டினராம். அதைத் தடுக்க வந்த அவரது சகோதரி சந்திரசெல்விக்கும் (14) வெட்டு விழுந்ததாம். பின்னா், அந்த மாணவா்கள் தப்பிஓடி விட்டனராம்.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமுற்ற 2 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையறிந்த அவா்களது தாத்தா கிருஷ்ணன் (60) அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜூ தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி நான்குனேரி, தென்னிமலை, நெடுங்குளத்தைச் சோ்ந்த பிளஸ்- 2 மாணவா்களான 17 வயதுடைய 4 போ், 2 சிறாா்கள் என 6 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, திருநெல்வேலி சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

இந்த நிலையில், நான்குனேரி நம்பி நகரைச் சேர்ந்த சந்திரசேகர்(16) என்பவரை சனிக்கிழமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments