தம்பிதுரை(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மோடியின் குடும்பம் இந்தியா; வீடு செங்கோட்டை: கார்கேவுக்கு தம்பிதுரை பதில்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு வீட்டில்தான் கொடியேற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலளித்துள்ளார்.

DIN

பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு வீட்டில்தான் கொடியேற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலளித்துள்ளார்.

தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றிய பிறகு பேசிய பிரதமர் மோடி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் இருந்து உரையாற்றுவேன் என்றார்.

இதனை விமர்சித்த கார்கே, பிரதமரின் இந்த கருத்து ஆணவத்தை வெளிக்காட்டுவதாகவும்; அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில்தான் தேசியக் கொடி ஏற்றுவாா் என்றும் கூறினாா்.

இந்நிலையில், அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில்,

“பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவரின் குடும்பம் இந்தியாதான். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால், அடுத்தாண்டு அவரது வீட்டில் கொடியேற்றுவார் என்று கார்கே கூறியது சரிதான்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!

மேலும் இரு ஆா்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா!

SCROLL FOR NEXT