இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க...!
இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் வரும் ஆக.21 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
Advertisement
இதையும் படிக்க: முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு!
மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- என்ற தொகுப்பில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.