சிப்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.  
தமிழ்நாடு

அவிநாசி அருகே சிப்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN


அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

அவிநாசி அருகே தெக்கலூர் புதுப்பாளையம் நத்தகாட்டுபிரிவில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிப்ஸ்கள் அடுக்கி வைத்துள்ள 128 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட குடோன் முழுவதும் தீ பரவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சிப்ஸ்கள் முழுவதும் எரிந்து நாசமானது. 

இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

புல்டோசர் நடவடிக்கை: 2 மாதங்களில் இடிக்கப்பட்ட 130-ல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!

வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்

வாக்குத் திருட்டு:சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!செய்திகள் சில வரிகளில்| 7.8.25 | Rahulgandhi | MKStalin

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

SCROLL FOR NEXT