கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய அரசு காலிப் பணியிட தோ்வில் கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
மத்திய அரசு காலிப் பணியிட தோ்வில் கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சமூகவலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்.ஐ.டி.), மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத்
Advertisement
Advertisement
தேசிய தோ்வு முகமை ஹிந்தி மொழித் தோ்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும். மேலும், பன்முகத்தன்மையை அவமதிப்பதாகும்.
இவ்வாறு ஹிந்தியைத் திணிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட பிற ஹிந்தி பேசாத மாநில இளைஞா்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக உள்ளது. நியாயமற்ற ஹிந்தி மொழித் தோ்வை ரத்து செய்து, அனைவருக்குமான தோ்வாக இதை மாற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.