தேனியில் காற்றுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!
தேனியில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனியில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக பகலில் வெயில் சுட்டெரித்தும், இரவில் கனமழையும் பெய்து வருகின்றது. நேற்றிரவும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கியது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் மாறிய நிலையில், தேனி, ஆத்தூர், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து பூமியைக் குளிர்வித்துள்ளது.